சுவாமி விவேகானந்தரின் 151வது பிறந்ததின நிகழ்வு நேற்று (12.01) வவுனியாவில்சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்திற்கு அருகாமையில் அவரின் நினைவுதூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பல்துறைசார்ந்த முக்கியஸ்தர்களால் மலர் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் கொண்டாடிய நிகழ்வில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் நினைவுரையாற்றினார் செல்வராசா சந்திரகுமார் (கண்ணன்) நன்றியுரையாற்றியிருந்தார்.
இன் நிகழ்வுக்கு சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தலைவர் நா.சேனாதிராசா, இலங்கை வங்கி முகாமையாளர் றோய், சிறி கணேசன், ஞானப்பிரகாசம் தேவராசா, கவிஞர் மாணிக்கம் ஜெகன், சூரியகுமார், தர்மலிங்ம் பிரதாபன், திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.