வவுனியாவில் நடைபெற்ற ஒளவையாரின் நினைவு தினம்!!(படங்கள்)

314


தமிழ், சைவப் புலவர் ஒளவையாரின் நினைவு தினம் வரலாற்று பதிவுகளாக இல்லாத நிலையில், தை பௌர்ணமி தினமான இன்றைய (15) தினத்தை நினைவு தினமாக கொண்டு வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கருகில் அனுஸ்டிக்கப்பட்டது.

குமாரசாமி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், ஒளவையாரின் சிலைக்கு மலர் மாலை மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் ஒளவையார் பற்றிய உரைகளும் இதன்போது இடம்பெற்றிருந்தன.



இந்த நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.சத்தியசீலன், குமாரசாமி நற்பணி மன்றத்தின் தலைவர் தேசமான்ய சு.குமாரசாமி, கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் எஸ். கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

a1 a2 a5