வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கமும் மாவட்ட திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் இரத்ததான நிகழ்வு தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்!!

1189

Vavuniya

சாரண தந்தை பேடன் பவல் பிரபுவின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியாவில், வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கமும் மாவட்ட திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் இரத்ததான நிகழ்வு எதிர்வரும் 22/02/2014 (சனிக்கிழமை) காலை 8.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆணையாளர் திரு ம.ச.பத்மநாதன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அனைவரும் பங்குபற்றி எமது உயிர் காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர் வைத்தியரும், ஜனாதிபதி சாரணர் சங்கத்தின் உப தலைவருமான அ.திலீப்குமார் கேட்டுகொண்டார்.

சமூகத்தின் உயிர் காக்கும் பணிக்கு தோள்கொடுக்கும் குருதி கொடையாளிகளை அன்புடன் வரவேற்கின்றோம்.

அன்புடன்
மாவட்ட ஜனாதிபதி சாரணர் சங்கம் மற்றும்
சிங்கம் திரிசாரணர் குழு,
வவுனியா.

மேலதிக தொடர்புகளுக்கு
Mr S Kandeepan – 0757729544
President President’s Scout Guild
Vavuniya

Dr A.Thileepkumar – 0777110987
Vice president President’s Scout Guild
Vavuniya

Mr A.Ananthan – 0775547108
Secretary President’s Scout Guild
Vavuniya