தேர்வுக் குழுவுக்கு தடை : பி.சி.சி.ஐ அதிரடி முடிவு!!

335

BCCIஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் புதிய கட்டுப்பாடுகளை புகுத்த இந்திய கிரிக்கெட் சபை(பிசிசிஐ) முடிவெடுத்துள்ளது.

வீரர்கள் ஆட்டம் எப்படி இருக்கிறது என்பதை நேரில் கண்டு அறிவதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடு செல்லும் போது தேர்வு குழுவினரும் உடன் செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில் தேர்வு குழுவினர் வெளிநாடு செல்ல இந்திய கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் சபைத் துணைத்தலைவர் ரவி சவாந்த் கூறுகையில், தேர்வு குழுவினருக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு குழுவினர் இந்திய வீரர்களின் ஆட்டத்தை பார்ப்பதற்காக வெளிநாடு செல்லக்கூடாது.

இந்தியாவில் நடக்கும் போட்டிகளின்போது மட்டும் வீரர்களின் ஆட்டத்தை தேர்வு குழுவினர் நேரில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.