கல்லறைகளில் புதைக்கப்பட்ட உடல்களை உண்ணும் கொடூர மனிதன்!!

357

Pak

பாகிஸ்தானின் டர்யா கான் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான முகம்மது ஆரிப் (35), முகம்மது ஃபர்மான்(30) ஆகியோரை சில ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 100 குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்து, அவற்றை சமைத்து உண்டதாக இவர்கள் மீது வழங்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து கடந்த ஆண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவர்களின் வீட்டில் இருந்து ஒருவகையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்து வீட்டினர் பொலிஸில் புகார் அளித்தனர். இதனையொட்டி, நேற்று காலை விரைந்து வந்த பொலிஸார் வீட்டினுள் ஒரு சிறுவனின் தலை மட்டும் கிடப்பதை கண்டு, சகோதரர்களில் ஒருவனான முகம்மது ஆரிப்பை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் முகம்மது ஃபர்மானை தேடி வருகின்றனர்.

தலைக்குரிய சிறுவனின் உடலம் எந்த கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதா, வேறு ஏதேனும் பிணங்களை இவர்கள் உண்டார்களா என்பது தொடர்பாக ஆரிப்பிடம் விசாரித்து வருகின்றனர்.