பாடசாலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவரைக் கண்டுபிடிக்க 500 பேரிடம் டிஎன்ஏ சோதனை!!

252


abuseபிரான்சில் 16 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து 500க்கும் மேற்பட்ட நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பிரான்சின் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாராசெல்லீ என்ற நகரம் உள்ளது, இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1200 மாணவர்கள் படிக்கின்றனர்.



இப்பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவி ஒருவர், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது மின்தடை ஏற்பட்டதால், அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் மாணவியை கற்பழித்து விட்டார்.

ஒரே இருட்டாக இருந்ததால் தன்னை சீரழித்தவன் யார் என அந்த மாணவியால் தெரிவிக்க முடியவில்லை. விசாரணையிலும், அந்த கயவன் யார் என அறிய முடியவில்லை.



எனவே டி.என்.ஏ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள் மற்றும் 21 பள்ளி அலுவலக ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவியை சீரழித்த நபர் யார் என்பது தெரியவரும்.