வவுனியாவில் மினி சூறாவளி : பல வீடுகள் சேதம்!!

339

Sooravai

வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை, கற்பகபுரம், அரபாநகர்- கிச்சிராபுரம் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்றால் வீடுகள் மற்றும் வியாபார தளங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சுழல் காற்றுடன் கூடிய மழை நேற்று புதன்கிழமை மாலை 5.30 தொடக்கம் சுமார் 7.00 மணி வரை காணப்பட்டதாக குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீட்டுப்பாவனை பொருட்கள்- வெதுப்பக இயந்திரங்கள் போன்ற பலபொருட்கள் சேதமடைந்துள்ளன.

அத்துடன் 15ற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு வெதுப்பகமொன்றும் 100 அடி நீளமான கோழிவளர்ப்பு கொட்டகையொன்றும் முற்றாக சேதமடைந்துள்ளன.