வவுனியா நோக்கி பயணித்த லொறி மாங்குளத்தில் கவிழ்ந்து விபத்து 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயம்!!

307


Accidentஇராணுவ சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியொன்று மாங்குளம் – இந்திரபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.

லொறி வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.