மீண்டும் வடிவேலு – சிங்கமுத்து பனிப்போர் ஆரம்பம்!!

315

Vadivelu-SIngamuttu

வடிவேலுவின் நடிப்பு குறித்தும், அவரது மீள்வருகை குறித்தும் நடிகர் சிங்கமுத்து கரவனுக்குள் அமர்ந்து வாக்குவாதம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில காலத்துக்கு முன் நடிகர் வடிவேலுவுக்கு, சிங்கமுத்து வாங்கிக்கொடுத்த சில அசையா சொத்துக்கள் அங்கீகாரம் இல்லாதவை என்பதால் அவர்களுக்கிடையே சண்டை வந்தது.

இதனால் இருவரும் மாறி மாறி வார்த்தை போர் நடத்தியதோடு, பொலிஸ் நிலையமும் சென்றார்கள். பின்னர் வடிவேலு எந்த படத்திலும் நடிக்காததால், அவர் கதை முடிந்து விட்டது என்று அவருக்கு எதிரானவர்கள் நினைத்துக்கொண்டனர்.

ஆனால், இப்போது மீண்டும் கதாநாயகனாகவே வடிவேலு அடுத்து நடிக்க ஆரம்பித்திருப்பதால் ஆத்திரத்தில் இருக்கிறார் சிங்கமுத்து.

அதனால் தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்புகளில் கரவனுக்குள் அமர்ந்து கொண்டு, வடிவேலுவின் நடிப்பு குறித்தும், அவரது மீள்வருகை குறித்தும் வடிவேலுவின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதம் செய்வதாக தெரியவந்துள்ளது.