இன்றும் கடும் மழை : மின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!

295


Thunder

இன்று காலை வேளையில் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கடல் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.



மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் வீசிய கடும் காற்று காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

மின்னலில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.