யாழ்.மருதனார்மடம் 72 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை கடந்த 2013ஆம் ஆண்டு ஐனவரி 23 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பிரதிஸ்டை செய்துவைத்து வைக்கப்பட்டது. இச்சிலை அடித்தளத்தில் இருந்து நேற்று முதல்(18.04) நீர் கசிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
72 அடி உயரமுள்ள இச்சிலை கடந்த 2013ஆம் ஆண்டு ஐனவரி 23 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பிரதிஸ்டை செய்துவைத்து வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சிலையின் அடித்தளத்திலிருந்து நீர் கசிந்து கொண்டிருக்கின்றது. இது அதிசயமா அல்லது சிலையில் நீர்க்குழாய் காணப்பட்டு அதில் உடைவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகின்றது.