இருதய நோய்களினால் நாள் தோறும் 150 பேர் மரணம்!!

367


Heartஇலங்கையில் இருதய நோய்களினால் நாள் தோறும் 150 பேர் உயிரிழக்கின்றனர். நாள் தோறும் இருதய நோய்களினால் 125 முதல் 150 பேர் வரையில் உயிரிழப்பதாக இருதய நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மரணங்களை தடுப்பதற்கு விசேட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.



புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இந்தியா, பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த நிபுணத்துவ மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.