உலக இளைஞர் தினத்தை அனுஸ்ரிக்கும் முகமாக நேற்று (19.04) சனிக்கிழமை வவுனியாவில் பாத்தீனியம் ஒழிக்கும் விசேட வேளைத்திட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட மாற்று வலுவுள்ளோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த சிரமதானம் வவுனியா இறம்பைக்குளத்தில் இடம் பெற்றது.
இதில் மாற்று வலுவுள்ள இளைஞர் யுவதிகள் அதிகளவில் கலந்து கொண்டதோடு இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாத்தீனியத்தை ஒழிக்கும் முகமாக சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.