வரலாற்றை மாற்றிய நக்மா!!

424

Nagmaநக்மாவின் களைகட்டும் பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சியின் வரலாறு மாறிவிட்டது. பிரபல நடிகையான நக்மா வருகின்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக, உத்திரபிரதேச மாநிலத்தின் மீரட் தொகுதியில் களம் இறங்கினார்.

மீரட் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று, நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டன. காங்கிரஸ் கூட்டம் என்றாலே, காலி நாற்காலிகளும், மைக்செட், பந்தல்காரர்களும் மட்டுமே காத்திருப்பார்கள்.

ஆனால் அந்த வரலாற்றை நக்மா, மாற்றி விட்டார் என்று தான் கூற வேண்டும். எப்படியாவது காங்கிரஸ் வேட்பாளரை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்து குவியும் வாலிப, வயோதிக அன்பர்களை, கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், கூடுதல் பாதுகாப்பு கோரி மனு கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

தேர்தல் ஆணையமும், காங்கிரசாரின் சிரமத்தை புரிந்து கொண்டு, நக்மா பிரசாரத்துக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்தது.

அவரது பிரசாரத்துக்கு வரும் கூட்டமெல்லாம், ஓட்டாக மாறினால், எதிர்த்தரப்பில் நிற்கும் வேட்பாளர்கள் யாருக்கும் டெப்பொசிட் கூட கிடைக்காது என்று வட இந்தியா முழுவதும் பரவலாக பேச்சு அடிபடத்தொடங்கி விட்டது.

இப்படியாக நடந்த நக்மா பிரசாரத்தின் மகத்துவம், மத்தியப்பிரதேசம் வரை சென்று பரவிவிட்டபடியால், அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர், எப்படியாவது சில நாட்கள் வந்து பிரசாரம் செய்து கொடுங்கள் என்று கெஞ்சிக்கூத்தாடி, நக்மாவை அழைத்துச் சென்றிருக்கிறார்.

மீரட்டில் தேர்தல் முடிந்து விட்டதால் நக்மாவும், பெருந்தன்மையாக மத்தியப்பிரதேசம் சென்று, பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.