வாக்களிக்காமல் வாக்கை வீணடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!

244

IPL

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஓட்டுக்கள் வீணாக போவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் ஓட்டுரிமையை விட்டு விடுவதாக கூறப்படுகிறது.

ஐ.பி.எல் தொடரின் முதல் கட்டப்போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. அதே சமயம் தேர்தல்கள் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றது.

இது பற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகளில் ஒருவரான பிரம்மா கூறுகையில், ஐ.பி.எல் போட்டிகளால் இந்திய வீரர்களின் ஓட்டுரிமை பாதிக்கப்படுகிறது. மற்ற நாடுகளை போல் இந்தியாவில் இணையதளத்தில் ஓட்டு போடும் வசதி இல்லை.

அதே போல் சில நாடுகளில் தேர்தலுக்கு முன்னே ஓட்டு போடும் வசதியும் உள்ளது. இணைய மற்றும் தபால் வழியாக போடப்படும் ஓட்டுக்கள் சிலருக்கு மட்டுமே விதிவிலக்காக உள்ளது, எனவே வீரர்கள் தங்களுக்கு போட்டி இல்லாத நேரங்களில் வந்து ஓட்டு போடுமாறு தெரிவித்துள்ளார்.