வவுனியா வைத்தியசாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!!

304

escapeவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சிறைக் கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார். கைகுண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரே தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையக அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி சுகயீனமடைந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

சிறைக் கைதி தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் கடமையை தவறவிட்டார்களா என்பது தொடர்பிலும் ஆராய்நது வருவதாக சிறைச்சாலைகள் தலைமையக அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.