ஜேர்மன் யுவதியை வல்லுறவு செய்ய முயற்சித்த விடுதி ஊழியர் கைது!!

279


Abuseஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்து முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான கிறிஸ்டினா எட்மன் என்ற யுவதி தனது அறையில் நித்திரை கொள்ளும் நேரத்தில் விடுதியின் ஊழியர் ஒருவர் 21ம் திகதி இரவு பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.



அதன்பின் யுவதி கூச்சல் சத்தமிட்டதன் காரணமாக ஊழியர் அவ்விடத்திலிருந்து வெளியே சென்றுள்ளார். இது குறித்து ஜேர்மன் யுவதி நேற்று (22.04) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

யுவதி வழங்கிய வாக்குமூலத்தின்படி விரைந்து சென்ற பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்த சந்தேகநபரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.