வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை : குஷ்பு கவலை!!

316


Kushbooடி.பி.சத்திரம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது, வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று நடிகை குஷ்பு பேசினார்.

மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடிகை குஷ்பு டி.பி.சத்திரம் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.



அப்போது அவர், அ.தி.மு.க. பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மின்சார தடை அதிகமாக உள்ளது. பல இடங்களில் 10 மணி நேரம், 12 மணி நேரம் கிராமப்புறங்களில் 16 மணி நேரம் வரை மின் தடை இருக்கிறது.

ஆட்சிக்கு வரும்போது மின் தடையை நீக்குவோம் என்று சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது வாழ்க்கையே இருண்டு கிடக்கிறது.



தண்ணீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் இலவச குடிநீர் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள்.



ஆனால் ஒரு லிட்டர் தண்ணீரை 10 ரூபாவிற்கு விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். உங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.


தி.மு.க. ஆட்சியில் மக்கள் பயம் இல்லாமல் இருந்தார்கள். இப்போது வீட்டை விட்டு வெளியே நிம்மதியாக போக முடியவில்லை. என்று பேசினார்.