சக மாணவியை பலாத்காரம் செய்த 10 வயது மாணவன்!!

278


Abuse1

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கால்வின்பே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மலசலகூடத்தில் வைத்து 10 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினான்.



இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனின் பெயரை வெளியிட பாடசாலை நிர்வாகம் மறுத்து விட்டது. தற்போது 12 வயதாகும் அச்சிறுவன் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அப்போது அச்சிறுவன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இச்சிறுவன் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு முன்னர் பாலியல் படத்தை பார்த்து உள்ளான். எனவே தான் எதிர்பாராத விதமாக இவ்வாறு நடந்துள்ளது. இச்சிறுவனுக்கு போதிய வயதில்லாததினால் இவனை குற்றவாளி என்று முடிவெக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.



இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அந்நாட்டு நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.