மீண்டும் தொடரும் ஐ.பி.எல் சூதாட்டம் : 9 பேர் கைது!!

243

IPLகடந்த ஐ.பி.எல் போட்டிகளில் நடந்த சூதாட்ட பிரச்சனை தொடரும் வேளையில், இந்த ஐ.பி.எல் தொடரிலும் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல். போட்டிகள் மெல்ல மெல்ல சூடு பிடித்து வரும் நிலையில் மறுபக்கம் கிரிக்கெட் சூதாட்டங்களும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. ஐ.பி.எல். பெட்டிங்கில் ஈடுபட்டதாக இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெட்டிங்கில் ஈடுபட்டதாக ஆகாஷ் மாத்தூர், கரன் சர்மா, முகேஷ் மீனா, வேத்பிரகாஷ், லால்சந்த், ஃபைசல் ஆகிய ஆறு தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் உள்ளூர்வாசிகள் என்பதும், கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து 7 ஆயிரத்து 800 ரூபாய் பணமும், பல லட்ச ருபாய் பணபரிவர்த்தனைக்கான வங்கி ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் வைத்திருந்த லப் டப், செல்போன்கள், எல்.ஈ.டி டி.வி ஆகிவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளன.