தேர்தலை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளுக்கு பூட்டு!!

360


Theater

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை (24.04) வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.



அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் மாலை 6 மணி வரை திரையரங்குகளில் படக்காட்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.