வவுனியாவில் வருமானத்தை பெற்றுத்தரும் குடைமிளகாய் பயிர்ச்செய்கை!!

459


Kudamulakaaiவவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரிவின் ஆலோசனையில் வவுனியாவின் பல பகுதிகளில் குடை மிளகாய் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியாவின் மணியர்குளம்- கணேசபுரம்- நெடுங்கேணி கிராமங்களில் அதிகளவான விவசாயிகள் இப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலநிலைக்கு பொருத்தமான வகையில் புதிய தொழில்நுட்பங்களையும் புதிய விவசாய பயிர்ச் செய்கைகளையும் அறிமுகப்படுத்திவரும் விவசாய திணைக்களத்தின் வவுனியா மாவட்ட விரிவாக்கல் பிரிவானது குடைமிளகாய் செய்கையில் அதிகளவான வருமானத்தை பெறும் வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.



இதேவேளை திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் மாகாண பிரதி பணிப்பாளர் ஏ.சகிலாபானு மற்றும் போதனாசிரியர்களின் நேரடியான கள பரிசீலிப்புகள் மற்றும் ஆலோசனைகளால் இச் செய்கை மூலம் குறைந்த செலவிலும் குறைந்த இடப்பரப்பிலும் அதிகளவான வருமானத்தை பெறமுடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.