புத்தரின் அடையாளத்தை பச்சை குத்திய நிலையில் இலங்கை செல்ல வேண்டாம் : பிரித்தானியா!!

310

Budha

புத்தபெருமானின் அடையாளங்களை பச்சை குத்தி செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு அமைச்சு, இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு அறிவுறுததியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் மீள்சேர்க்கப்பட்ட சுற்றுலா அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 37 வயதான பிரித்தானிய பெண் ஒருவர் கை புஜத்தில் புத்தபெருமானின் உருவத்தை பொறித்திருத்தமையை அடுத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படவிருக்கிறார். இதனையடுத்தே பிரித்தானிய வெளியுறவு அமைச்சு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.