பேஸ்புக் தொடர்பில் கடந்த 4 மாதங்களில் 500 முறைப்பாடுகள்!!

278


Facebook

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் குறித்து 500ற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.



இந்த முறைப்பாடுகளில் 80% போலி பேஸ்புக் கணக்குகள் குறித்தவை என பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

மற்றையவர்களின் பேஸ்புக் கணக்கிற்குள் பிரவேசித்தல் மற்றும் பேஸ்புக் கணக்கை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.