கடந்த 24.07.2016 அன்று வவுனியா தமிழச் சங்கத்தில் திருமலை, கவிச்சுடர் சிவரமணியின் ‘அவள் ஒரு தனித்தீவு’ என்ற நூல்அறிமுக விழா நடைபெற்றது.
வவுனியா ஆதிவினாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் தமிழ்ச் சங்கத் செயலாளர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, M.P.நடராஜா முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.வீரசிங்கம் பிரதீபன் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர், ஆறுமுகம் அம்பிகைபாகன், திருமதி பராசக்தி ஜெகநாதன், திரு வே.கஜேந்திரகுமார் செயலாளர் ஆதிவினாயகர் ஆலயம், கவிச்சக்கரம் கி.உதயகுமார், தமிழ்மணி கே.கே. அருந்தவராஜா (மேழிக்குமரன்) கவிஞர் கவிச்சுடர் சிவரமணி, கவிஞர் வே.முல்லைத்தீபன் உட்பட பல கலைஞர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.