வவுனியா CCTMS பாடசாலையில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா!!

1575


 
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை மாணவிகள் நடன நிகழ்வில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றமைக்கான பாராட்டு விழா இன்று (28.07.2016) பாடசாலையின் அதிபர் க.வஸ்தியாம்பிள்ளை தலைமையில் பாடசாலை பிரகாசம் மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவிகளின் உழவர் நடனம் அரங்கில் அரங்கேற்றப்பட்டது.



இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் வவுனியா கோட்டக்கல்விப் பணிப்பாளருமான எம்.பி.நடராஜா கலந்துகொண்டு நடனத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி உரை நிகழ்த்துகையில்

இந்த நடனத்தை தேசிய மட்டம் வரை எடுத்துச் சென்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டதானது ஆசிரியர்களின் முயற்சியும் உழைப்பும் தான் என சுட்டிக்காட்டியதுடன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.



வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி அதிபர் திருமதி சூரியயாழினி வீரசிங்கம் தனது மாணவியும் நடன ஆசிரியையுமான திருமதி நந்தினி ருக்சாவை தேசிய ரீதியில் மாணவர்களை வெற்றிபெற வைத்தமைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.



தேசிய ரீதியில் நடனத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றதுடன். ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வவுனியா கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராஜா தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


நிகழ்வில் வவுனியா தெற்கு அழகியல் உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி க.சூரியகுமார், பாடசாலை மேம்பாட்டு வலயப் பிரதிநிதி திருமதி வசந்தி குலராசா, தொழில் வழிகாட்டி ஆலோசகர் திருமதி கிரேனியா, சங்கீத ஆசிரியர் சி.பிரதீபன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_5991 IMG_5997 IMG_6011 IMG_6022 IMG_6023 IMG_6024 IMG_6027 IMG_6028 IMG_6029 IMG_6050 IMG_6064 IMG_6067 IMG_6071 IMG_6075 IMG_6076 IMG_6085 IMG_6087 IMG_6090 IMG_6093 IMG_6095 IMG_6097 IMG_6102 IMG_6104 IMG_6105 IMG_6107 IMG_6108