வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 213வது வெற்றி விழா!!

234


 
மாவீரன் பண்டாரவன்னியனின் முல்லை கோட்டையை தகர்த்து கைப்பற்றிய 213ஆவது வெற்றி விழா வவுனியாவில் இன்று காலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூவியில் இடம்பெற்றது.

மாவீரன் பண்ணடாரவன்னியனின் நினைவுரைகள் இடம்பெற்றதையடுத்து மலர்தூவி மலர் மாலை அணிவித்தனர்.



இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவனியா மாவட்ட செயலாளர் கா.உதயராசா, நகர வரியிறுப்பாளர் சங்கத்தலைவரும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலருமான சந்திரகுமார் (கண்ணன்) முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் எம்.சிற்றம்பலம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன்,செந்தில்நாதன் மயூரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் , சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1 DSC_0060 DSC_0062 DSC_0069 DSC_0071 DSC_0073 DSC_0075 DSC_0076 DSC_0078 DSC_0080 DSC_0081 DSC_0086 DSC_0087 DSC_0088 DSC_0090