வவுனியா மயிலங்குளம் பகுதியில் நேற்று 27.08.2016 மாலை இரண்டு கைக்குண்டு மற்றும் கிளைமோர் ஒன்றினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.
நேற்று மாலை வவுனியா மயிலங்குளத்திலுள்ள தனது வெற்றுக் காணியினை துப்பரவுப் பணிகள் மேற்கொண்டபோது சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கி இரண்டு கைக்குண்டு மற்றும் கிளைமோர் என்பனவற்றை மீட்டு வெடிக்கவைத்துள்ளனர்.