வவுனியா இறம்பைக்குளம் தொண்டர் நிறுவனத்தில் இன்று(28.08.2016) மாலை இரா.சிறீஞானேஸ்வரன் எழுதிய சிறையில் இருந்து மடல்கள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அ.சத்தியானந்தன்(தலைவர் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்), வவுனியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமார், மேழிக்குமரன், மூத்த ஊடகவியலாளர் திரு.மாணிக்கவாசகம், கலைஞர் மாணிக்கம் ஜெகன், மற்றும் கலை இலக்கிய நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.