வவுனியா தெற்கிலுப்பைக்குளம் 6ம் ஒழுங்கை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் விஞ்ஞாபனம் கடந்த 17.08.2016 அன்று
ஆலய பிரதமகுரு சிவாச்சாரிய திலகம் சிவ ஸ்ரீ சிவசங்கர குருக்ககள் மற்றும் சி .ஸ்ரீ .சங்கரசர்மா தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் 26.08.2016 அன்று காலை சங்காபிசேகத்துடன் அலங்கார உற்சவம் இடம்பெற்று 27.08.2016 சனிக்கிழமை தீர்தோற்சவம் மிகச் சிறப்பாக இடம்பெற்று கொடியிறக்கத்துடன்நிறைவுபெற்றது.
மேற்படி உற்சவகாலத்தில் காவடி பாற்ச்செம்புத் திருவிழா, மாவிளக்குத் திருவிழா, இத் திருவிழாவில் பக்தர்கள் பாற்ச்செம்பு, தீச்சட்டி, காவடிகள் எடுத்து தமது நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தியிருந்தனர் .
-சுவீந்திரன்-