வவுனியா ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை தனியார் காணி ஒன்றின் உரிமையாளர் தனது காணியினை சுத்திகரிக்கும்போது மண்ணில் புதையுண்ட நிலையில் 30 துப்பாக்கிகளைக்கண்ட நிலையில் ஓமந்தைப் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அவ்விடத்தில் புதையுண்டு கிடந்த விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் இத் துப்பாக்கிகளை பொலிசார் கைப்பற்றி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.
எனினும் அவ்விடத்தில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் இன்று காலை அவ்விடத்தில் தேடுதலை மேற்கொண்ட பொலிசார் மேலும் 11 துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும் மொத்தம் 41 எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.