2 வயது மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தாய் : அதிர்ச்சி சம்பவம்!!

503

chelsey-russell-crop

அமெரிக்காவில் தண்ணீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற முயன்ற தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Lakewood பகுதியை சேர்ந்தவர் Chelsey J.Russell (32). இவர் தன் குடும்பத்துடன் உத்தாவில் உள்ள போவல் பகுதி ஏரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்குள்ள ஒரு படகில் Chelsey J. Russell தன் இரண்டு வயது மகனுடன் சவாரி செய்துள்ளார். படகில் சவாரி செய்த போது அவரின் இரண்டு வயது மகன் படகின் மேல் பகுதிக்கு செல்ல முயன்றிருக்கிறார். இதனால் எதிர்பாராத விதமாக ஏரியின் தண்ணீருக்குள் விழுந்தான்.

இதை கவனித்த Chelsey J. Russell தன்னுடைய பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல், மகனை காப்பாற்றுவதற்காக உடனே தண்ணீரில் குதித்தார்.

தண்ணீரில் குதித்த அவர் ஏரியின் ஆழமான பகுதி என்பதால், அவர் தண்ணீருக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர் தன்னையும் தன் மகனையும் காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்தது.

இறுதியாக தான் தண்ணீரில் மூழ்கினாலும் பரவாயில்லை என கருதி, தன் இரண்டு வயது மகனை தனது கையால் தண்ணீருக்கு மேலாக தாங்கி பிடித்தபடியே நீரில் மூழ்கினார்.

மற்றொரு படகில் இருந்த அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து அவரது கையில் இருந்த 2 வயது மகனை உயிருடன் மீட்டனர்.

ஆனால் Chelsey J. Russell தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் உயிரிழந்ததற்கு life jackets இல்லாமலே தண்ணீரில் குதித்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.