வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 8ஆம் திகதி நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக வெகு விமர்சையாக இடம்பெற்று வருக்கின்றது.
அந்த வகையில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று மாம்பழ திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும் பிள்ளையாரும் வெளி வீதி உலா வந்து மாம்பழ திருவிழா இடம்பெற்றது.
இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.