வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!(2ம் இணைப்பு)

223

 
வவுனியாவில் இன்று(30.08.2016) காலை மாவட்ட செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டடோர் தினத்தில் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தா.சலசலோசன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் சர்வதேச விசாரணையே தேவை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இன்று இடம்பெற்ற காணாமற்போனோர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது காணாமற்போன உறவுகள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

1 DSC_0239 DSC_0242 DSC_0243 DSC_0245 DSC_0246 DSC_0248 DSC_0250 DSC_0251 DSC_0252 DSC_0253 DSC_0254 DSC_0255 DSC_0256 DSC_0258 DSC_0259 DSC_0260 DSC_0261 DSC_0262 DSC_0266 DSC_0274 DSC_0279 DSC_0283 DSC_0284