வவுனியாவில் இன்று(30.08.2016) காலை மாவட்ட செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டடோர் தினத்தில் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தா.சலசலோசன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் சர்வதேச விசாரணையே தேவை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
இன்று இடம்பெற்ற காணாமற்போனோர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தின் போது காணாமற்போன உறவுகள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.