நடிகர் அருண் விஜய் கைது!!

236

Arunvijay

நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரத்தில் பொலிஸ் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தான், அருண் விஜய் தப்பிச் சென்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

காவல்துறையினர் வேண்டுமென்றே அவரை தப்பிக்க விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

வழக்கை விசாரித்த போக்குவரத்து உதவி ஆணையர் ஜெகதீசன், விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் சதீஷ், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தப்பிச் சென்ற அருண் விஜயை தனிப்படை பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த நடிகர் அருண் விஜய் பரங்கிமலையில் உள்ள, போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜரானார்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.