பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு உயிர் பிச்சை கேட்ட தந்தை!!

429

D1

எரித்திரியா நாட்டை சேர்ந்த குடியேறிகள் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட படகுகள் மூலம் லிபியா கடல் மார்க்கமாக இத்தாலி நோக்கி பயணித்துள்ளனர்.

இதில், லிபியா கடற்கரையில் இருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தொலைவில் கூட்ட மிகுதியின் காரணமாக படகு நகர முடியாமல் தத்தளித்துள்ளது.

இதனால், படகுகளில் இருந்த சில ஆண்கள் தங்கள் உயிரை காப்பற்றிக்கொள்வதற்காக கடலுக்குள் குதித்துள்ளனர். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ன செய்வதென்று அறியாமல் படகுக்குள்ளேயே அமர்ந்துகொண்டனர்.

இதில், தந்தை ஒருவர் பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டே, பரிதவித்தபடி நின்றுகொண்டிருந்தார்.

மேலும் படகானது கடலிலேயே தத்தளித்துக்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்காக லிபியா கப்பல்படை அதிகாரிகள் விரைந்து வந்து, பெரிய படகின் உதவியுடன் அவர்களை அதிலிருந்து மீட்டனர்.

இந்த படகில் பயணித்த 1,100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடல் வழி பயணத்தில் பல்லாயிரம் உயிர்கள் காவு வாங்கப்பட்டாலும், மக்களின் செவிகள் இதனை ஏற்க மறுக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உயிர் வாழ்வதற்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றவர்களில் இதுவரை 2,726 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச குடியேறிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

D2 D3