வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதானம் இன்று(25.09.2016) காலை 7.30 தொடக்கம் 11 மணிவரை பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 3000க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், வவுனியா பொலிஸ், வவுனியா நகரசபை மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரின் பங்களிப்புடன் அதிபர் T.அமிர்தலிங்கம் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று பாடசாலை சுற்றாடல் சுத்தம் செய்யப்பட்டது.
இச் சிரமதான அழைப்பை ஏற்று இந்த சிரமதான நடவடிக்கையில் பங்கேற்று பாடசாலை மற்றும் சுற்றாடலை அழகு படுத்தும் செயல்த்திட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கையில் கைகோர்த்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.