வவவுனியா மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் சமாசத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் ஏற்ப்பாட்டின் கீழ் கடந்த 25.09.2016 அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் கிராம அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
குறித்த இக்கலந்துரையாடலில் 173 அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் கிராமங்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் கிராமமடடத்தில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்களின் கருக்கத்துக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் முன்னிலையில் பிரதேசசெயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர் , பிரதேசசபை செயலாளர் , மாவாட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமாசத்தின் தலைவர் போன்றோர் பதிலளித்தனர்.
இந்த கூட்டத்தில் மஸ்தான் எம்.பி உரையாற்றுகையில், இவ் அமைப்புக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள், கோரிக்கைகளை சம்மபந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேரடியாக சந்தித்தித்துப்பேசி விரைவில்தீர்வொன்றை பெற்றுத்தருவதாகவும், வன்னி மாவட்டத்திலுள்ள கிராமங்களின் அபிவிருத்தி திட்டடங்களுக்கு தான் தான் எப்பொழுதும் முழு மூச்சாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.