போர்த்துக்கலைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்பட்ட நோயை மருத்துவர்கள் தவறாக இனங்கண்டதால், அவர் 43 வருடகாலம் அநாவசியமாக சக்கரக் கதிரை யின் மூலமே நடமாடிய நிலையில், மீண்டும் நடக்கிறார்.
போர்த்துக்கலின் தென் பகுதியிலுள்ள அலான்ட்ரோல் எனும் கிராமத்தைச் சேர்ந்த ரூபினோ பொரேகோ எனும் இந் நபருக்கு 13 ஆவது வயதில் நோயொ ன்று ஏற்பட்டது.
இவருக்கு குணப்படுத்த முடியாத தசை நோயொன்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால், அவருக்கு தசைகளை பலவீனமாக்கும் மையாஸ் தெனியா எனும் மற்றொரு நோயே ஏற்பட்டிருந்ததாக 2010 ஆம் ஆண்டு நரம்பியல் நிபுணர் ஒருவர் கண்டறியந்தார்.
இது மருந்துகள் மூலம் குணப்படுத்தக் கூடிய நோயாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இவ் விடயம் தெரியவந்தபோது ரூபினோ பொரேகோவுக்கு 55 வயதாகியிருந்தது என போர்த்துக்கல் பத்திரிகையொன்று அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது 61 வயதான ரூபினோ பொரேகோ இது தொடர்பாக கூறுகையில், “என்னால் சாதாரணமான வகையில் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாதிருந்தது.
எமது வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவிலேயே பாடசாலை இருந்தது. இந் நிலையில், என்னால் நடக்க முடியாததால் பாடசாலையிலிருந்து நான் விலகினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ரூபினோவை அவரின் தந்தை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது 3 மருத்துவர்கள் பரிசோதித்தனர். தம்மால் ரூபினோவை குணப்படுத்த முடியாது என அவர்கள் தெரிவித்தனராம்.
அதன்பின் வேறு வழியின்றி 43 வருடங்கள் சக்கர நாற்காலியிலேயே ரூபினோ நடமாடினார். 2007 ஆம் ஆண்டு, வைத்தியசாலைக்கு வழக்கமான மருத்துவச் சோதனைகளுக்குச் சென்ற வேளையில், நரம்பியல் நிபுணர் ஒருவரை சந்தித்தார்.
அவரே, ரூபினோவுக்கு குணப்படுத்த முடியாத தசை நோய் ஏற்படவில்லை என்பதையும் இலகுவாக குணப்படுத்தக்கூடிய அரிய வகையான மையாஸ்தெனியா எனும் மற்றொரு நோயே ஏற்பட்டுள்ளது என்பதையும் இரத்தப் பரிசோதனையின் பின்னர் கண்டறிந்தார்.
அம் மருத்துவர் சிபாரிசு செய்த மருந்துகளை உட்கொண்ட ஓரிரு நாட்களில் தனது உடலுக்கு வலிமை ஏற்பட்டுள்ளதை உணர்ந்தாகவும் பின்னர் தான் சக்கரக் கதிரையில் நடமாட வேண்டிய அவசியமில்லை என மருத்துவர்கள் தெரிவித் ததாகவும் ரூபினோ பொரேகோ தெரிவித்துள்ளார்.