மருத்துவர்களின் தவறால் 43 வருடங்கள் சக்கரக் கதிரையில் நடமாடிய நபர்!!

250

1

போர்த்­து­க்கலைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ருக்கு ஏற்­பட்ட நோயை மருத்­து­வர்கள் தவ­றாக இனங்கண்டதால், அவர் 43 வரு­ட­காலம் அநா­வ­சி­ய­மாக சக்­க­ரக் ­க­தி­ரை யின் மூலமே நட­மா­டிய நிலையில், மீண்டும் நடக்­கிறார்.

போர்த்­து­க்கலின் தென் பகு­தி­யி­லுள்ள அலான்ட்ரோல் எனும் கிரா­மத்தைச் சேர்ந்த ரூபினோ பொரேகோ எனும் இந்­ ந­ப­ருக்கு 13 ஆவது வயதில் நோயொ ன்று ஏற்­பட்­டது.

இவ­ருக்கு குணப்­ப­டுத்த முடி­யாத தசை நோயொன்று ஏற்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வர்கள் கூறினர். ஆனால், அவ­ருக்கு தசை­களை பல­வீ­ன­மாக்கும் மையாஸ் தெ­னியா எனும் மற்­றொரு நோயே ஏற்பட்டிருந்­த­தாக 2010 ஆம் ஆண்டு நரம்­பியல் நிபுணர் ஒருவர் கண்­ட­றி­யந்தார்.

இது மருந்­துகள் மூலம் குணப்­ப­டுத்தக் கூடிய நோயாகும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆனால், இவ்­ விடயம் தெரி­ய­வந்­த­போது ரூபினோ பொரே­கோ­வுக்கு 55 வய­தா­கி­யி­ருந்­த­து என போர்த்­துக்கல் பத்திரிகை­யொன்று அண்­மையில் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தற்­போது 61 வய­தான ரூபினோ பொரேகோ இது தொடர்­பாக கூறு­கையில், “என்னால் சாதா­ர­ண­மான வகையில் எழுந்து நிற்­கவோ, நடக்­கவோ முடி­யா­தி­ருந்­தது.

எமது வீட்­டி­லி­ருந்து ஒரு கிலோ­மீற்றர் தொலை­வி­லேயே பாட­சாலை இருந்­தது. இந்­ நி­லையில், என்னால் நடக்க முடி­யா­ததால் பாட­சா­லை­யி­லி­ருந்து நான் வில­கினேன்” எனத் தெரி­வித்­துள்ளார்.

ரூபி­னோவை அவரின் தந்தை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்­ற­போது 3 மருத்­து­வர்கள் பரிசோதித்­தனர். தம்மால் ரூபி­னோவை குணப்­ப­டுத்த முடி­யாது என அவர்கள் தெரி­வித்­த­னராம்.

அதன்பின் வேறு வழி­யின்றி 43 வரு­டங்கள் சக்­கர நாற்­கா­லி­யி­லேயே ரூபினோ நட­மா­டினார். 2007 ஆம் ஆண்டு, வைத்­தி­ய­சா­லைக்கு வழக்­க­மான மருத்­துவச் சோத­னை­க­ளுக்குச் சென்ற வேளையில், நரம்பியல் நிபுணர் ஒரு­வரை சந்­தித்தார்.

அவரே, ரூபி­னோ­வுக்கு குணப்­ப­டுத்த முடி­யாத தசை நோய் ஏற்­ப­ட­வில்லை என்­ப­தையும் இல­கு­வாக குணப்­ப­டுத்­தக்­கூ­டிய அரிய வகை­யான மையாஸ்­தெ­னியா எனும் மற்­றொரு நோயே ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தையும் இரத்தப் பரி­சோ­த­னையின் பின்னர் கண்­ட­றிந்தார்.

அம்­ ம­ருத்­துவர் சிபா­ரிசு செய்த மருந்­து­களை உட்கொண்ட ஓரிரு நாட்களில் தனது உடலுக்கு வலிமை ஏற்பட்டுள்ளதை உணர்ந்தாகவும் பின்னர் தான் சக்கரக் கதிரையில் நடமாட வேண்டிய அவசியமில்லை என மருத்துவர்கள் தெரிவித் ததாகவும் ரூபினோ பொரேகோ தெரிவித்துள்ளார்.

2