விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாடலை எழுதியவர் கவிஞர் அண்ணாமலை. மேலும் பிச்சைக்காரன் படத்தில் நெஞ்சோரத்தில், ஒருவேளை சோற்றுக்காக, மற்றும் நினைத்தாலே இனிக்கும் படத்தில் ‘பன்னாரஸ் பட்டுகட்டி’ உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களை எழுதியவர்.
இவர் 1992ம் ஆண்டு புதுவயல் என்ற திரைப்படத்துக்காக தனது முதல் பாடலை எழுதினார். அதன்பின்னர், 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு கவிஞர் அண்ணாமலைக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதன்பின்னர், சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த அண்ணாமலைக்கு வயது 49. இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், 5 வயதில் ரித்திகா என்ற மகளும் இருக்கின்றனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை சினிமாவில் பாடல் எழுத வருவதற்கு முன் பத்திரிகையாளராக பணியாற்றிவர்.
எம்.பில் முடித்த இவர், பிஎச்டி ஆய்வுப் பட்டத்துக்கான முயற்சியிலும் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 20 படங்களுக்கும் மேல் அவர் பாடல் எழுதி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது..
மறைந்த அண்ணாமலைக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்