இலங்கையின் கடன் சுமையை குறைப்பது தொடர்பில் தலையிட உலகின் முக்கிய நாடுகள் சில இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் இவ்வாறு இணங்கியுள்ளதாக, நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் குழு நேற்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்த வேளை இதனை உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியுள்ளனர்.
தற்போது இலங்கையின் கடன் தொகை 8500 பில்லியன் ரூபாய் வரை உள்ளதாகவும் அவற்றில் 42 வீதம் வௌிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.