உலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை!!

271

baby

பொதுவாக ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை என இரண்டு பேர் பெற்றோராக இருப்பர். ஆனால், தற்போது 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பெற்றோர் இணைந்து ஒரு குழந்தையைப் பெற்றுள்ளனர்.

தாய், தந்தை, கரு தானம் செய்தவர் ஆகிய மூவரும் இந்த முயற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

சிலருக்கு மரபணு குறைபாடு காரணமாக குழந்தைகள் பிறப்பதில்லை. குழந்தை உருவானாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது. சிலவேளை குழந்தை பிறந்தாலும் ஒரு விதமான விநோத நோயினால் குழந்தை இறந்துவிடுகிறது.

இக்குறைபாட்டைப் போக்கவே 3 பெற்றோர் மூலம் கருத்தரிக்கச் செய்து ஒரு குழந்தை உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாயின் மரபணுவில் உள்ள அரிய நோய் குழந்தையைப் பாதிக்காமல் இருப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அனைவரது உடலிலும் உள்ள செல்களில் மைட்டோ காண்ட்ரியாக்கள் உள்ளன. இவை ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு உணவை சக்தியாக மாற்றி எடுத்துச்செல்கின்றன. ஆனால், சில பெண்களுக்கு அந்த மைட்டோ காண்ட்ரியாக்களில் மரபணு குறைபாடுகள் உள்ளன. அதனால் தான் குழந்தைகள் பிறப்பு தடுக்கப்படுகிறது. அதைப்போக்க நல்ல உடல் நலத்துடன் கூடிய மற்றொரு பெண்ணின் மைட்டோ காண்ட்ரியாவை கருவுற்ற பெண்ணின் கருமுட்டையுடன் இணைக்கின்றனர். அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் மரபணு நோயில் இருந்து காக்கப்படுகின்றன.

இது போன்ற குழந்தை சமீபத்தில் பிறந்துள்ளது. ஜோர்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரபணு குறைபாடு இருந்தது. அவருக்கு நல்ல உடல் நலத்துடன் கூடிய பெண்ணிடம் இருந்த மைட்டோ காண்ட்ரியா தானமாகப் பெறப்பட்டு ஜோர்தான் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டது. பின்னர் ஜோர்தான் பெண்ணின் கணவர் விந்தணு கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு கருத்தரிக்க செய்யப்பட்டது. அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அது 5 மாத குழந்தையாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

இந்த முயற்சியில் அமெரிக்க மருத்துவர்கள் குழு ஈடுபட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை மெக்சிக்கோவுக்கு வரவழைத்து உலகில் முதன்முறையாக 3 பெற்றோர் இணைந்து பெற்றெடுத்த குழந்தையை உருவாக்கியுள்ளனர். ஏனெனில் மெக்சிக்கோவில் இதுபோன்று குழந்தை பெற தடைச்சட்டம் எதுவும் இல்லை.

மருத்துவத்துறையில் இது ஒரு புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது.