பிளாஸ்டிக் பையில் பிணத்தை எடுத்து சென்ற கொடுமை : தொடரும் அவலம்!!

706

body

பீகாரில் அம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் கடிகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 14 நாட்களுக்கு முன்பாக கங்கை நதியில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலை தீயணைப்பு துறையினர் அழுகிய நிலையில் கண்டெடுத்தனர்.

இதனையடுத்து அந்த உடல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் மறுநாள் வரை பிரேத பரிசோதனை செய்யாத மருத்துவர்கள், உடலை அருகிலுள்ள பாகல்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

அவரது உறவினர்கள் தங்களிடம் பணம் இல்லாத காரணத்தால், அம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர், ஆனால் எந்தவித வசதியும் மருத்துவர்கள் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து இறந்தவர் உடலை அவரது உறவினர்கள் பிளாஸ்டிக் பையில் போட்டு தூக்கி சென்றுள்ளனர். வழியில் கூட அவர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.

சாதாரண மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கூட கிடைக்காத இது போன்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.