ஆதிவாசி ஒருவர் கல்லால் அடித்துக் கொலை!!

641

veduvar

குருகும்புர பகுதியில் கல் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி ஆதிவாசி ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சினையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என மகியங்கனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கல் தாக்குதல் காரணமாக காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையே பலியாகியுள்ளார்.

மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் 78 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மஹியங்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.