முதல் விமானியாகும் புலம்பெயர் ஈழத்தமிழர்!!

420

srilankan-tamil-pilot

தமிழன் என்ன சாதித்தான் என்று கேட்கும் காலம் மாறி, இன்று தமிழர்களின் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏறாளமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ள நிலையில், இன்று பல சாதனைகளையும் படைத்துள்ளனர்.

அந்த வகையில் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட றொப்பி ஜெயரத்தினம் என்ற தமிழர் முதலாவது விமானியாகியுள்ளார். ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இவர் பிரான்ஸில் பிறந்துள்ளார்.

பிரித்தானியாவில் தனது விமானி பயிற்சி முடித்த றொப்பி ஜெயரத்தினம் தற்போது விமானியாகியுள்ளார். றொப்பி விமானிகியாகியுள்ளமை தமிழர்களின் துரித வளர்ச்சியை வெளிக்காட்டி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.