வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் நவராத்திரி கால ஆன்மீக சொற்பொழிவுகள்!

545


வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே ஆன்மீக நல்லறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் நவராத்திரி காலத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் இரண்டாவது வருடமாகவும் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு அங்கமாக 05.10.2016 புதன் கிழமையன்று சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் s.s. வாசன் அவர்களினால்”பல்லுயிர் ஓம்புதல்”என்ற தலைப்பில் சொற்பொழிவு இடம்பெற்றது.



தொடந்து 5.10.2016 வியாழக் கிழமை வ/பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் வித்தியாரத்னா திரு.ஈ.எஸ்.வரதன் அவர்கள்”வாழும் வழி” என்னும்பொருளில் உரை நிகழ்த்தினார்.

07.10.2016,வெள்ளிக்கிழமை அன்று வவுனியா பிரதேசசெயலகத்தின் கலாசார உத்தியோகத்தர்,பண்டிதர் வீ.பிரதீபன் “ஆயகலைகள்” என்னும் பொருளில் உரை நிகழ்த்தினார். 10.10.2016 திங்கட்கிழமையன்று ஆசிரியர் திரு.த.சுதன் அவர்கள் “உள்ளக்கமலம்” என்னும்பொருளில் உரைநிகழ்த்தஉள்ளார்.



14585721_580143625520492_38099512_o 14585740_580143542187167_1867303543_o 14614388_580143945520460_1872781967_o