இலங்கை தமிழரசுக்கட்சியின் சமகால அரசியல் சம்பந்தமான கலந்துரையாடல் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இன்று(16.10.2016) காலை 10.30 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழத்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு கட்சியின் கடந்த கால செயற்பாடுகள், கட்சியின் நிலைப்பாடுகள் குறிப்பாக எழுக தமிழ், வடமாகாணசபை, நிலவரங்கள், பொருளாதார மத்திய நிலையம், அது தொடர்பாக கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் வவுனியா மாவட்ட கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் கட்சியின் பேச்சாளர் எடுத்துக்கூறினார்.
வவுனியா மாவட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது. இதில் பெருமளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.