நேற்று மாலை (16.10.2016) யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்து ஒன்றின் மீது வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வைத்து நான்கு பேர் கொண்ட குழு ஒன்றினால் கல்லால் எறிந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தை மேற்கொண்ட குழுவில் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
இதேவேளை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் மது போதையில் நின்றார்கள் எனவும் ஒருவர் தனியார் பேரூந்தொன்றில் பணிபுரிபவர் என்றும் அறியப்படுகிறது.