நுண்நிதி கடன் கொடுக்கும் நிறுவனங்களை மூடுமாறு கோரி வவுனியாவில் இன்று(17.10.2016) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.
மத்திய பேரூந்து நிலையத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில், கிழமைகளில் பெறப்படும் கடன்களினால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் துர்ப்பாக்கிய நிலையில் தாம் வாழ்ந்து வருவதாகவும், அரசாங்கம், வடமாகாணசபை இதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்து இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்கள்.
நுண் நிதிக் கடன் ஒரு தூக்குக்கயிறு, யுத்தத்தில் துப்பாக்கி நல்லாட்சியில் நுண் கடன், கடன் கொடுத்து பட்டினி போடாதே, போன்ற வாசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்கள்.