மேக்கப் கலைந்ததால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்!!

256

div

திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக மேக்கப் இல்லாமல், தன் மனைவியை பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்து விவாகரத்து கோரியுள்ளார்.

துபாயை சேர்ந்த 38வயது ஆணும் , 28வயது பெண்ணும் சிலநாட்களுக்கு முன்பு புதிதாக திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண் அதீத அழகுடன் இருக்கவே கணவனுக்கு பெருமை தாங்கவில்லை.

சந்தோஷமாகவே எல்லாம் முடிந்தது. ஹனிமூன் கிளம்பினர். இருவரும் குளிப்பதற்காக நீச்சல்குளத்திற்கு சென்று நன்றாக குளித்தனர். அப்போது கணவன் மனைவியின் உண்மையான முகத்தை பார்த்து அடையாளம் தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம்.

அளவுக்கதிமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக விவாகரத்து செய்ய அவர் முடிவெடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் மனமுடைந்த அந்தப் பெண், உளவியல் நிபுணர் டாக்டர் அப்துல் அஜிசிடம் உதவிக் கோரிஇருந்தார்.

ஆனால் உளவியல் நிபுணரின் ஆலோசனையை அந்த நபர் கேட்பதாகவே இல்லை. தனது முடிவில் உறுதியாகவே இருக்கிறார். அந்த பெண் திருமணத்திற்கு முன்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இனி அவர்கள் சேர்வது கடினம் “என்று கூறுகிறார் உளவியல் நிபுணர்.

அதீத மேக்அப் வாழ்க்கைக்கே உலை வைத்துவிட்டது என்பதுதான் சோகம். இந்த சம்பவத்தை கல்ஃப் நியூஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் அவர்களின் பெயர்களையும் அவர்கள் யார் என்பது பற்றியும் அந்த உளவியல் நிபுணர் தகவல் தெரிவிக்கவில்லை.